SEKAR REPORTER

கலைமகள் சபா பெயரில் உள்ள நிலங்களை உறுப்பினர்களுக்கு பகிர்ந்து அளிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ரிசீவராக நியமிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

கலைமகள் சபா பெயரில் உள்ள நிலங்களை உறுப்பினர்களுக்கு பகிர்ந்து அளிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ரிசீவராக நியமிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கலைமகள் சபா எனும் நிதி நிறுவனம் 5 லட்சத்து 33 ஆயிரத்து 356 உறுப்பினர்களிடம் பெற்ற முதலீடு மூலமாக தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 13 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டது. இந்நிறுவனத்துக்கு எதிராக முறைகேடு புகார்கள் வந்ததையடுத்து இந்த நிர்வாகத்தை கவனிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கலைமகள் சபா நிர்வாகத்தை நிர்வகிக்க பதிவுத்துறையில் உதவி தலைமைப் பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை சிறப்பு அதிகாரியாக நியமிக்க தமிழக அரசின் வணிக வரித்துறை செயலருக்கு கடந்த 2021 நவம்பரில் உத்தரவிட்டு இருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து கோவையைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பி்த்து 2 ஆண்டுகள் கடந்தும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. உறுப்பினர்கள் அனைவருக்கும் 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து நிலங்களை உறுப்பினர்களின் பெயர்களி்ல் பங்கிட்டு வழங்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ரிசீவராக நியமிக்க வேண்டும், எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.ஆர்.கமலநாதன், வக்கீல் சின்னதுரை இடையீட்டு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி. மோகனகிருஷ்ணன் ஆகியோர், கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்கள் தமிழகம் மட்டுமி்ன்றி அண்டை மாநிலங்களிலும் உள்ளது என்பதால், இந்த வழக்கில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்தால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும், என வாதிட்டனர். அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version