SEKAR REPORTER

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலியாக என்.சி.சி முகாம் நடத்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆகஸ்ட் 5ம் தேதி ஆகஸ்ட் 9ம் தேதி வரை தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். கடந்த 9 ம் தேதி கலையரங்கில் வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்த 13
வயது மாணவியை அதிகாலை 3 மணியளவில், தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன், பாலியல் தொல்லை செய்துள்ளார்.

மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், பர்கூர் அனைத்து மகளிர் காவல்துறையனர் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிஃபர், தாளாளர் சாந்தன், என்.சி.சி. பயிற்றுநர்களான சக்திவேல், இந்து, சத்யா, சுப்பிரமணி மற்றும் சிவராமன் ஆகியோரை கைது செய்தனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் அனுமதி இல்லாமல் போலியாக என்.சி.சி முகாம் நடத்தியது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக காவல்துறை புலனாய்வு ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவராமன்
ஆகஸ்ட் 23ம் தேதி காலையில் அவர் உயிரிழந்தார்.
தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவராமனின் தந்தையும் வாகன விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சிவராமனின் மரணம் திட்டமிட்டே குற்றவாளிகளை தப்பிக்க வைக்க நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் அல்லது சிறப்பு குழு விசாரணை செய்தால் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்புள்ளது. இதுவரை அந்த மாவட்டத்தில் 4 பயிற்சி முகாம்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அதனால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு ஆகஸ்ட் 27ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலியாக என்.சி.சி முகாம் நடத்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆகஸ்ட் 5ம் தேதி ஆகஸ்ட் 9ம் தேதி வரை தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். கடந்த 9 ம் தேதி கலையரங்கில் வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்த 13
வயது மாணவியை அதிகாலை 3 மணியளவில், தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன், பாலியல் தொல்லை செய்துள்ளார்.

மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், பர்கூர் அனைத்து மகளிர் காவல்துறையனர் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிஃபர், தாளாளர் சாந்தன், என்.சி.சி. பயிற்றுநர்களான சக்திவேல், இந்து, சத்யா, சுப்பிரமணி மற்றும் சிவராமன் ஆகியோரை கைது செய்தனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் அனுமதி இல்லாமல் போலியாக என்.சி.சி முகாம் நடத்தியது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக காவல்துறை புலனாய்வு ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவராமன்
ஆகஸ்ட் 23ம் தேதி காலையில் அவர் உயிரிழந்தார்.
தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவராமனின் தந்தையும் வாகன விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சிவராமனின் மரணம் திட்டமிட்டே குற்றவாளிகளை தப்பிக்க வைக்க நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் அல்லது சிறப்பு குழு விசாரணை செய்தால் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்புள்ளது. இதுவரை அந்த மாவட்டத்தில் 4 பயிற்சி முகாம்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அதனால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு ஆகஸ்ட் 27ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version