SEKAR REPORTER

சதானந்தத்தின் வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் சதானந்தத்திற்கு 70 வயது ஆகிறது அவருக்கு திகார் சிறையில் உடல் நலம் குன்றி சரிவர மருத்துவ வசதிகள் இல்லாததால் அவரை நல்ல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமென்றும், அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டுமென்று வாதிட்டார்,

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

2000 கோடி போதை கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதானந்தம் பிணை மனு இன்று 04-06-2024 டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நீதிபதி சுதீர் குமார் சிரோகி முன்பு விசாரணைக்கு வந்தது, சதானந்தத்தின் வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் சதானந்தத்திற்கு 70 வயது ஆகிறது அவருக்கு திகார் சிறையில் உடல் நலம் குன்றி சரிவர மருத்துவ வசதிகள் இல்லாததால் அவரை நல்ல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமென்றும், அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டுமென்று வாதிட்டார், மேலும் என்.சி.பி. தரப்பில் விசாரணை அதிகாரியின் அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பிணை மனுக்கு பதில் மனு போடுவதற்கு பிணை மனுவின் விசாரணையை மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்கமாறும் வாதிட்டார். இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி சதானந்தத்தை உடனடியாக சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அவருக்கு சிகிச்சை அளித்த விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும், பிணை மனுவை ஜூலை மாதம் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version