தாழ்த்தப்பட்டோர் குறித்து, சமூக வலைதளத்தில் அவதுாறாகப் பேசிய வழக்கில், நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக்கு எதிரான சாட்சிகளுக்கு ‘சம்மன்’ அனுப்ப, சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர், இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். தொடர்ந்து, மீராமிதுன், சாம் அபிஷேக் ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

தாழ்த்தப்பட்டோர் குறித்து, சமூக வலைதளத்தில் அவதுாறாகப் பேசிய வழக்கில், நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக்கு எதிரான சாட்சிகளுக்கு ‘சம்மன்’ அனுப்ப, சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோர் குறித்து, அவதுாறாகப் பேசி சமூக வலைதளத்தில், நடிகை மீரா மிதுன் வீடியோ வெளியிட்டார். இதுதொடர்பாக, பல்வேறு அமைப்புகள், அவர் மீது போலீசில் புகார் அளித்தனர்.
அதையடுத்து, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட, ஏழு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்து, கடந்தாண்டு ஆகஸ்ட்டில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் இருவரையும் கைது செய்தனர்.

அதன்பின், இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர், இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். தொடர்ந்து, மீராமிதுன், சாம் அபிஷேக் ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் சாட்சி விசாரணைக்காக, மீரா மிதுன், அவரது நண்பர் ஆகிய இருவரும் ஆஜராகினர். இதையடுத்து, இவ்வழக்கில் மீரா மிதுன், அவரது நண்பருக்கு எதிரான சாட்சி விசாரணைக்காக, சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, ஆகஸ்ட் 6க்கு வழக்கை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

You may also like...