SEKAR REPORTER

மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமிதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கேள்வி எழுப்பியுள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

பதவிகாலம் முடிந்த பின்பு எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநராக ஆர்.என்.ரவி நீடிக்கிறார் என
மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி,
தமிழக ஆளுநர் அலுவலகத்திற்கு
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் சில கேள்விகளை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில்,
கடந்த18.09.2021 அன்று தமிழக ஆளுநராக மாற்றப்பட்டு, ஐந்தாண்டு கால அவகாசம் 31.07.2024 அன்று முடிவடைந்ததுள்ளது என்றும்,

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக் காலத்தை நீட்டிக்கும் உத்தரவையோ அல்லது அடுத்த ஆளுநர் நியமிக்கப்படும் வரை பதவியில் நீடிப்பதற்கான எந்த உத்தரவையும் நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே
அடுத்த ஆளுநர் நியமிக்கப்படும் வரை பதவியில் தொடர இந்தியக் குடியரசுத் தலைவர் ஏதேனும் உத்தரவு பிறப்பித்துள்ளாரா?
இல்லாவிட்டால், பதவிக்காலம் முடிவடையும் காலத்திற்கு பிறகு நீங்கள் எந்தத் தகுதியின் கீழ் ஆளுநர் பதவியில் தொடர்கிறீர்கள்?

நீங்கள் ஆளுநராக இருந்து விலகிய பிறகும் நீங்கள் ஆளுநர் பதவியில் நீடிப்பது சட்டவிரோதம் இல்லையா?

அப்படியானால் நீங்கள் எப்போது ராஜ்பவன் வளாகத்தை காலி செய்வீர்கள் என
கேள்விகளை எழுப்பியுள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version