SEKAR REPORTER

20,00,000/- காசோலையை பார் கவுன்சில்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

[13/09, 08:14] sekarreporter1: https://youtu.be/73ajCwQypq4?si=nXLFwdOwMZ7RAFPF
[13/09, 08:14] sekarreporter1: பத்திரிகை செய்தி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர்களுக்கான
விபத்து காப்பீடு திட்டத்தை National Insurance நிறுவனத்துடன்
இணைந்து செயல்படுத்திக் கொண்டுவருகிறது. இத்திட்டதில் இணைந்த பொள்ளாச்சியை சேர்ந்த வழக்கறிஞர் திரு. தியாகராஜ் அவர்கள் 09.03.2024 அன்று விபத்தில் அகால மரணமடைந்தார். எனவே இக்காப்பீடு திட்டத்தின் மூலம் இறந்த வழக்கறிஞர் திரு. தியாகராஜ் அவர்களின் மகள்
ஹரினி -க்கு ரூ.20,00,000/- காசோலையை பார் கவுன்சில் தலைவர்
திரு. P.S. அமல்ராஜ் அவர்கள், துணை தலைவர் திரு. V. கார்த்திகேயன், இணை தலைவர்கள் திரு. K. பாலு, திரு. G. மோகனகிருஷ்ணன் மற்றும் National Insurance நிறுவனத்தின் நிர்வாகிகள் முன்னிலையில் இன்று வழங்கப்பட்டது. மேலும், இத்திட்டத்தின் கீழ் விபத்தில் உயிரிழந்த
வழக்கறிஞருக்கான காப்பீட்டுத் தொகையை பெறும் முதல் பயனாளி
ஹரினி ஆவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version