SEKAR REPORTER

Acj bench order தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை பாதுகாக்க கோரிய வழக்கில், விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை பாதுகாக்க கோரிய வழக்கில், விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட கோரி சேலத்தை சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது,

அரசு தரப்பில், கோவில் நிலங்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் தனது மனுவில் கோரியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

பின்னர், அரசின் தவறால் தான் இதுபோன்ற வழக்குகள் வருகிறது என்று அரசு தரப்புக்கு சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version