கள்ளக் குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பாக தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளதாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் நடந்த விஷ சாராய பலியில் அண்ணாமலையின் சதி இருக்குமோ என்று சந்தேப்படுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது தெரிவித்திருந்தார்.க்ஷ
இதுசம்பந்தமாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை சார்பில் வழக்கறிஞர் பால்கனகராஜ், ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
உண்மைக்கு புறம்பான, தவறான கருத்துக்களைக் கூறி, மக்கள் மத்தியில் அண்ணாமலையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில், களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளதால்ண, இந்த நோட்டீஸ் பெற்ற மூன்று நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்; கள்ளக் குறிச்சி கருணாபுரத்தில் போதை மறுவாழ்வு மையம் அமைப்பதற்காக ஒரு கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்க என அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.