SEKAR REPORTER

Smsj bench உத்தரவில் நாங்கள் கையெழுத்து இட வில்லை.. உத்தரவில் திருப்தி இல்லை என்றால் அந்த வழக்கை தன்னிச்சையாகமீண்டும் விசாரிக்கஎங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

உயர்நீதிமன்றத்தில் இறுதி உத்தரவு பிறப்பித்த பின்பு அதை திரும்ப பெற முடியாது..

முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர்சேட் தரப்பில் கடும் எதிர்ப்பு….

உத்தரவில் திருப்தி இல்லை என்றால் அதை தன்னிச்சையாக திரும்ப விசாரிப்பதற்கு அதிகாரம் உள்ளது – நீதிபதிகள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்…

இந்த வழக்கில் இறுதி வாதம் முடிந்துவிட்டதாக கூறுவது தவறானது- அமலாக்கத்துறை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2011ம் ஆண்டு தொடர்ந்த வழக்கை , உயர்நீதிமன்றம் ரத்து செய்தது .

இதே புகார் தொடர்பாக சட்ட
விரோத பணப்பரிமாற்றத் தடைச்
சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது
அமலாக்கத்துறை கடந்த 2020ம் ஆண்டு தொடர்ந்த
வழக்கை
ரத்து செய்யக் கோரி ஜாபர் ஷேட்
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் சிவஞானம் ஆகியோரடங்கிய அமர்வு வழக்கை ரத்து செய்வதாக நீதிமன்ற அறையில் அறிவித்தது.

பின்னர் சில விளக்கங்கள் வேண்டும் என வழக்கை மீண்டும் பட்டியலிட்டனர்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் அமர்வு,
இன்று விசாரணை
வந்தபோது, ஜாபர் சேட் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.மோகன், இறுதி
உத்தரவு பிறப்பித்தபின்பு மீண்டும் விசாரிக்க முடியாது, உத்தரவின் நகலில் கையெழுத்து போட்டாலும் போடாவிட்டாலும் மீண்டும் விசாரிக்க முடியாது,
அப்படி விசாரிக்க வேண்டும் என்றால் இருதரப்பிற்கும் மீண்டும் விசாரிப்பதாக நோட்டீஸ் கொடுத்த பின்பே விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் உத்தரவை, மனுதாரர் உட்பட அனைவருமே பார்த்துக் கொண்டிருக்கிருந்தனர்..
ரத்து செய்வதாக அறிவித்த பின்பு மீண்டும் விசாரிப்பதனால் வழக்கு தொடர்ந்தவரின் நிலை என்ன? நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை என்னவாகும் ?எனவும் வாதிட்டார்.

மேலும் பொறுப்பு தலைமை நீதிபதியிடம்
இந்த அமர்வு விசாரிக்க கூடாது,வேறு அமர்வு விசாரிக்க உத்தரவிட வேண்டும்,
இணையதள பதிவுகளில் உத்தரவு விவரம் நீக்கப்பட்டு தில்லுமுல்லு நடந்துள்ளது குறித்து விசாரிக்க வேண்டும் என மெமோ தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

எனவே
மீண்டும் இந்த வழக்கை இதே அமர்வு விசாரிக்க கூடாது , நீங்கள் எதையோ மனதில் வைத்துக் கொண்டு மீண்டும் விசாரிக்கிறீர்கள் எனவே விசாரிக்க கூடாது என நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஒரு உத்தரவை திரும்ப பெறுவதற்கான அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லையா?
என கேள்வி எழுப்பினா்.

உத்தரவில் நாங்கள் கையெழுத்து இட வில்லை.. உத்தரவில் திருப்தி இல்லை என்றால் அந்த வழக்கை தன்னிச்சையாக
மீண்டும் விசாரிக்க
எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தனர்.

அமலக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி,
இந்த வழக்கில் இறுதி வாதம் முடிந்துவிட்டதாக கூறுவது தவறானது என்றும்
தொழில்நுட்ப காரணங்களுக்காகவே ஜாபர்சேட் மீதான மூல வழக்கு ரத்து செய்யப்பட்டதாகவும்,
நீதிமன்றத்தில் இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version