அண்ணாமலை வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவின் பகுதி

யுடியூப் சேனலுக்கு 44:25 நிமிடங்கள் அண்ணாமலை பேட்டி அளித்திருந்த நிலையில், அதில் தீபாவளி தொடர்பான குறிப்பிட்ட பகுதியை கொண்ட 6:50 நிமிடங்களை எடுத்து அவரது கட்சியின் எக்ஸ் வலைதளத்தில் தீபாவளிகு 2 நாட்களுக்கு முன்பாக பகிர்ந்துள்ளனர்

இந்த பேட்டியில் இந்து கலாச்சாரத்திற்கு எதிராக கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் செயல்படுவது போல முன்னிறுத்தியதன் மூலம், சமுதாயத்தை பிளவுபடுத்த வேண்டுமென்ற உள்நோக்கம் அவருக்கு இருந்துள்ளது என்பதற்கு முகாந்திரம் உள்ளது

இந்திய காவல் பணியின் முன்னாள் அதிகாரியான அண்ணாமலை சட்டத்தை பற்றி தெரிந்திருப்பார். கட்சியின் மாநில தலைவராக மக்களிடம் செல்வாக்கு பெற்ற இவரது கருத்துக்கள் இந்து மதத்தினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்

சுற்றுச்சூழல் நலனுக்காக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திடீரென மத ரீதியிலான பதட்டத்தை எடுத்து செல்லும் வாகனமாக மாற்றப்பட்டுள்ளது

அண்ணாமலையின் பேச்சு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது என்பதற்கும் முகாந்திரம் உள்ளது

பேட்டியளித்து 400 நாட்கள் கடந்த பிறகு சமுதாயத்தில் வன்முறை, பொது அமைதிக்கு குந்தகம் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்ற அண்ணாமலை தரப்பு வாதத்தை ஏற்க முடியாது

எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு நிரந்தரமாக உள்ளதால், இதுபோன்ற பேச்சுகள் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய வெடிகுண்டை (ticking bomb) போன்றது

பியூஷ் மனுஷ் அளித்த புகாரை தெளிவாக ஆராய்ந்த பிறகே, சேலம் மாஜிஸ்திரேட் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்

எனவே வழக்கை ரத்து செய்ய முடியாது. ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

You may also like...