ஆறு மாத சிறை தண்டனையை எதிர்த்து, நடிகையும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் மீதான தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

ஆறு மாத சிறை தண்டனையை எதிர்த்து, நடிகையும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் மீதான தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

நடிகையும், முன்னாள் எம்.பியுமான ஜெயப்பிரதா சென்னையைச் சேர்ந்த ராம்குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலை அருகில் ஜெயப்பிரதா என்கிற திரையரங்கை நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயப்பிரதா தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் வழக்கறிஞர் கௌசிக் ஆஜராகி, ஈ.எஸ்.இ. தொகைக்கான வட்டித்தொகை 37 லட்சம் ரூபாய் ஜெயப்பிரதா செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஜெயப்பிரதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அப்துல் ஹமீது ஆஜராகி, வழக்கு தொடரப்படாத காலத்திற்கும் சேர்த்து வட்டி தொகை செலுத்தவேண்டும் என கணக்கிடப்பட்டதாகவும், அதனடிப்படையில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார்.

வட்டியை செலுத்த முன்வந்தால் மட்டுமே தண்டனையை எதிர்த்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியும் என ஏற்கனவே நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ஜெயப்பிரதா தரப்பில், 20 லட்ச ரூபாயை செலுத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை, பதிவு செய்த நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடமால தள்ளிவைத்தார்.

You may also like...