உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.* *அன்புமணி ராமதாஸ் பேட்டி.

*உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.* *அன்புமணி ராமதாஸ் பேட்டி..*
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வலியுறுத்தியும்,
தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்திட கோரியும் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கறிஞர் செயற்பாட்டு குழு சார்பில் தொடர் முழக்க கூட்டம் கூட்டமாக சென்னை உயர்நீதிமன்ற ஆவின் நுழைவாயில் பகுதியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். உயர் நீதிமன்ற வழக்காடு வழியாக தமிழைக் கொண்டு வர வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறார்கள்.
சட்டமன்றத்தில் இதற்காக கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசியல் சாசன சட்டத்தில் 348 வது பிரிவு 2 இல் உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியை மாற்ற குடியரசு தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது.
இரண்டாவது முறையாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழை வழக்காடு மொழியாக மாற்ற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.
ஆனால் அதன் பிறகு முன்னேற்றம் காணவில்லை.தற்போது நல்ல சூழல் இருக்கிறது. தற்போதைய முதலமைச்சர் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அழுத்தம் கொடுக்க வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் ஆதரவளிக்க வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பார்கள்.சதவீதமாக இருந்த விளை நிலங்களின் பரப்பளவு 36 சதவீதமாக குறைந்து இருக்கிறது. விளைநிலங்கள் குறையாமல் தொழிற்சாலைகளை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 1950-60 ஆண்டுகளில் தமிழுக்காக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது போல தற்பொழுதும் தமிழுக்கான போராட்ட நடத்த வேண்டும் என்றே வலியுறுத்தினார்.சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியது தவறானது. மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் ஆனால் அதற்கான மனது தான் இல்லை.

You may also like...