டீன்ஸ்’ திரைப்படத்திற்கு பணியாற்றியதற்காக தனக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை குறித்து நேரில் பேச மறுக்கும் நடிகர் பார்த்திபன், காவல்துறை

டீன்ஸ்’ திரைப்படத்திற்கு பணியாற்றியதற்காக தனக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை குறித்து நேரில் பேச மறுக்கும் நடிகர் பார்த்திபன், காவல்துறை மூலம் தன்னை மிரட்டி வருவதாக படத்தில் பணியாற்றிய கிராபிக்ஸ் கலைஞர் சிவ பிரசாத் தெரிவித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாக உள்ள ‘டீன்ஸ்’ என்ற திரைப்படத்தில் கிராஃபிக்ஸ் பணியாளராக கோவையைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர் பணிபுரிந்திருக்கிறார்.

இருவருக்கும் இடையேயான ஒப்பந்தப்படி, கடந்த பிப்ரவரி மாதமே கிராஃபிக்ஸ் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் அதற்கு ஊதியமாக 68 லட்சத்து 50 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் தவனையாக 42 லட்சம் கொடுத்த பார்த்திபன், சிவப்பிரகாஷ் ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்காததால் முழுத் தொகையும் கொடுக்காமல் கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, சிவபிரசாத் மீது கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் பார்த்திபன் கொடுத்த புகார் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தனக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை முழுமையாக செலுத்தும் வரை ‘டீன்ஸ்’ திரைப்படம் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சிவபிரசாத் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஒப்பந்தத்தின் போது பேசியதை விட அதிக கிராபிக்ஸ் வேலைகள் கொடுத்ததாலேயே குறிப்பிட்ட நாட்களுக்குள் பணிகள் முடிக்க கால தாமதம் ஏற்பட்டதாகவும், தனக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையான சுமார் 51 லட்சம் கொடுக்கும் வரை வரை ‘டீன்ஸ்’ திரைப்படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக ஜூலை 18 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் பார்த்திபனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர், செய்தியாளருக்கு பேட்டியளித்த சிவ பிரசாத்,
நிலுவை தொகை 50 லட்சம் ரூபாய் கேட்டால் தன்னை தகாத வார்த்தைகளை கூறி திட்டுவதுடன் தன்னை இயக்குனர் பார்த்திபன் மிரட்டுவதாக தெரிவிதார்.

தாமதத்தை காரணம் காட்டி தங்கள் நிறுவனத்திற்கு தரவேண்டிய தொகையை தர மறுப்பதாகவும், நாங்கள் வழங்கிய படகாட்சிகளை வைத்தே படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்..

டீன்ஸ் படத்தில் தன்னுடைய காட்சிகள் எவ்வளவு உள்ளது என்பதை பார்த்து அதை வைத்தும் மேல்முறையீடு உள்ளதாகவும் தெரிவித்தார்.

லோகேஷ் கனகராஜ், ஐஸ்வர்யா ரஜினி காந்த் உள்ளிட்டோரிடம் வேலை பார்த்துள்ள நிலையில், பார்த்திபன் எங்களை அசிங்கப்படுத்தியது மட்டுமல்லாமல் தொழிலே முடங்கும் அளவிற்கு கலங்கத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் வேதனை தெரிவித்தார்.

You may also like...