தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான இறுதி கொள்கையை அறிவிக்க தமிழக அரசுக்கு இரு மாதங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

[4/4, 15:27] Sekarreporter: தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான இறுதி கொள்கையை அறிவிக்க தமிழக அரசுக்கு இரு மாதங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் சீமை கருவேலமரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளன.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த தமிழக அரசு, இதுதொடர்பாக கொள்கையை வகுக்க அவகாசம் கோரியிருந்தது.

இந்த வழக்குகள், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில், சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக வரைவு கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொதுமக்கள் கருத்துக்கள் கேட்கப்பட்டதாகவும், இறுதி கொள்கை முடிவை அறிவிக்க எட்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

மேலும், தற்போதும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும், 700 ஹெக்டேர் பரப்பு அடையாளம் காணப்பட்டு, மரங்கள் அகற்றும் பணி துவங்கி விட்டதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசுத்தரப்பின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்குகளின் விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
[4/4, 17:09] Sekarreporter: சீமைக் கருவேலம் மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சீமைக் கருவேலம் மரங்களை அகற்றக் கோரிய வழக்கில் தமிழ்நாடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சையது முசாமில் அப்பாஸ் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், தமிழக முழுவதும் 196 வகையான அன்னிய மரங்கள் பரவியுள்ளதாகவும், இதில் 23 வகையானவை உடனடியாக கவனம் செலுத்தி அப்புறப்படுத்த வேண்டியவை என முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

700 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இவற்றை அகற்றுவதற்கான முன்னோடித் திட்டத்திற்காக 5 கோடியே 35 லட்ச ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென அரசுக்கு அனுப்பப்பட்டதாகவும், போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயங்களிலும், தர்மபுரி பகுதியிலும் உள்ள 200 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மரங்களை அகற்றுவது என முதல்கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையான மரங்கள் மேலும் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமைக் கருவேலம் மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்த கால நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதற்கடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் வளராமல் கண்காணிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் செயல்திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...