நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அய்யப்பராஜ், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் முப்பது ஆண்டுகளாக மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் பொதுக்கூட்டம் நடத்தி வருவதாகவும், இந்தாண்டு கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லை என கூறினார்.

 

அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் பொதுக்கூட்டத்திற்கு மாற்று இடத்தில் அனுமதி வழங்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்க கோரி பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளரிடம் அளித்த மனு பரிசீலிக்கபடவில்லை என கோவை மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் ஜேம்ஸ் ராஜா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அய்யப்பராஜ், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் முப்பது ஆண்டுகளாக மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் பொதுக்கூட்டம் நடத்தி வருவதாகவும், இந்தாண்டு கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லை என கூறினார்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ், பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி கடந்த ஆறாம் தேதியே திமுக சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆனால் அதிமுக சார்பில் ஏழாம் தேதி விண்ணப்பிக்கப்பட்டதாகவும் கூறினார்.

எனவே அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த திமுகவிற்கு அனுமதி அளிக்க உள்ளதாகவும், மாற்று இடமாக பல்லடம் சாலையில் உள்ள ராஜேஸ்வரி மகால் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அதிமுக விரும்பினால், அதற்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, பல்லடம் சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி புதிய விண்ணப்பம் அளிக்க அதிமுகவிற்கு உத்தரவிட்ட நீதிபதி, அதன் அடிப்படையில் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

You may also like...