நீதிபதி டீக்கா ராமன் முன் ஜாமீன் மனுவை விசாரித்தார்.. அப்பொழுது காவல்துறை தரப்பில் குடியாத்தம் குமரன் பேசிய பேச்சுக்களை தட்டச்சு செய்த காகிதத்தை நீதிபதியிடம் அளித்தனர்.. அதை படித்த நீதிபதி அதிருப்தி அடைந்து.. குடியாத்தம் குமரன் வழக்கறிஞர் சி பிரபாகரன் அவர்களிடம் இதை நீங்களே படிங்க இதெல்லாம் முறைதானா இப்படி அவதூறா அசிங்கமா பேசலாமா என்று கேட்டுவிட்டு வழக்கை அடுத்த புதன்கிழமைக்கு ஆகஸ்ட் 16 ந் தேதி க்கு ஒத்திவைத்து .. அதற்கு முன் குடியாத்தம் குமரன் இதுபோல் அவதூறாக அசிங்கமாக யாரையும் பேசமாட்டேன் என்று அபிடவிட் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.. இந்த வழக்கு மீண்டும் அடுத்த புதன் கிழமை விசாரணைக்கு வருகிறது
அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நடிகை விந்தியா அவர்களைப் பற்றி யூடியூபில் அவதூறாக பேசியதாக திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன் மீது அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்ப துரை சென்னை மாநகர காவல் துறையில் சைபர் கிரைம் பிரிவில் நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்திருந்தார்..
அதில் திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.. ஜாமீனில் வர முடியாத பிரிவு களில் வழக்குப்பதிய பட்டது..
போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க
குடியாத்தம் குமரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார் ..
இன்று 09/08/2023 மாண்புமிகு நீதிபதி டீக்கா ராமன் முன் ஜாமீன் மனுவை விசாரித்தார்.. அப்பொழுது காவல்துறை தரப்பில் குடியாத்தம் குமரன் பேசிய பேச்சுக்களை தட்டச்சு செய்த காகிதத்தை நீதிபதியிடம் அளித்தனர்.. அதை படித்த நீதிபதி அதிருப்தி அடைந்து.. குடியாத்தம் குமரன் வழக்கறிஞர் சி பிரபாகரன் அவர்களிடம் இதை நீங்களே படிங்க இதெல்லாம் முறைதானா இப்படி அவதூறா அசிங்கமா பேசலாமா என்று கேட்டுவிட்டு வழக்கை அடுத்த புதன்கிழமைக்கு ஆகஸ்ட் 16 ந் தேதி க்கு ஒத்திவைத்து ..
அதற்கு முன் குடியாத்தம் குமரன் இதுபோல் அவதூறாக அசிங்கமாக யாரையும் பேசமாட்டேன் என்று அபிடவிட் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.. இந்த வழக்கு மீண்டும் அடுத்த புதன் கிழமை விசாரணைக்கு வருகிறது