பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காததால் மூன்றாவது முறையாக அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்த மறுக்கும் நாகை மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுகரசை அவமதிப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன், நாகை மாவட்ட கல்வி அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

    பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி பல முறை உத்தரவிட்டும், அமல்படுத்தாத நாகை மாவட்ட கல்வி அலுவலருக்கு எதிராக ஆசிரியை மூன்றாவது முறையாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

    நாகை மாவட்டம், ஆயக்காரம்புலம் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்ட வெண்ணிலா என்பவர், தனது நியமனத்துக்கு ஒப்புதல் கோரி மாவட்ட கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்தும், நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பணி நியமனம் தொடர்பான ஆவணங்களை பரிசீலித்து 8 வாரத்துக்குள் முடிவு எடுக்க கடந்த 2016ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்பின்னரும் ஓப்புதல் அளிக்காததால், வெண்ணிலா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 6 வாரத்துக்குள் பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசீலிக்கும்படி கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டது.

    ஆனால், வெண்ணிலாவின் கோரிக்கையை நிராகரித்து கடந்த 2018ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவமதிப்புச் சட்டத்தின் கீழ் மாவட்ட கல்வி அலுவலரை தண்டிப்பதால் எந்த பயனும் ஏற்படாது எனக் கூறி, பணி நியமனத்துக்கு 8 வாரத்துக்குள் ஒப்புதல் அளிக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டார்.

    அதன்பின்னரும், பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காததால் மூன்றாவது முறையாக அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்த மறுக்கும் நாகை மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுகரசை அவமதிப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன், நாகை மாவட்ட கல்வி அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

You may also like...