பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது கட்ட கலந்தாய்வு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது கட்ட கலந்தாய்வு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

தனியார் சுயநிதி தொழிற்கல்வி, கலை, அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

2021-22ம் கல்வியாண்டுக்கான முதற்கட்ட கலந்தாய்விற்கு பிறகு காலியாக உள்ள 70,437 இடங்கள் 2ஆம் கட்ட கலந்தாய்வு நடத்தினால் தங்கள் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் வெளியேறி, தங்கள் கல்லூரிகள் பாதிக்க கூடும் என வழக்கு

முக்கிய கல்வி நிறுவனங்களில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளதால் தகுதியான மாணவர்களுக்கு இடம் வழங்கும் வகையில் மாணவர்கள் நலனைக் கருதி இரண்டாவது கலந்தாய்வு நடத்த முடிவு.ல். டிசம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கோரி ஏஐசிடிஇ-க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் – தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது கட்ட கலந்தாய்வு நடத்தும் அரசு முடிவுக்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

2021-22ம் கல்வியாண்டுக்கு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த அக்டோபர் மாதம் நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களில், 70 ஆயிரத்து 437 இடங்கள் காலியாக உள்ளன.

காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பும் வகையில், இரண்டாவது கட்ட கலந்தாய்வு நடத்த முடிவு செய்துள்ளதாக கூறி நவம்பர் 25ம் தேதி உயர் கல்வித் துறை செயலாளர் அரசாணை பிறப்பித்தார்.

இரண்டாவது கலந்தாய்வு நடத்தினால் ஏற்கனவே தங்கள் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் வெளியேறக் கூடும் என்பதால் தனியார் கல்லூரிகள் பாதிக்க கூடும் எனக் கூறி,
இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு தனியார் சுயநிதி தொழில் கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் நவம்பர் 30ம் தேதி வகுப்புகளை துவங்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தன்னிச்சையானது எனவும், கடந்த 17 ஆண்டுகளாக இரண்டாவது கலந்தாய்வு நடத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்த போது, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், முக்கிய கல்வி நிறுவனங்களில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்கள் நலனைக் கருதி இரண்டாவது கலந்தாய்வு நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தகுதியான மாணவர்களுக்கு இடம் வழங்கும் வகையில் டிசம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கோரி ஏ ஐ சி டி இ -க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், இரண்டாவதுப்கட்ட கலந்தாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்அரசு சிறப்பு வக்கீல் ரவிசந்திரன் கோரிக்கை விடுத்தார்.

அரசுத்தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பு தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...