பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன், நீதிபதி முகமது ஷஃபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ப்ளீடர் எட்வின் பிராபகர் ஆஜராகி, பெண்கள் பாதுகாப்புக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கைகள் எடுத்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுசம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பிரதான பேருந்து, ரயில் நிலையங்களில் பெண்களுக்கான  காவல் நிலையத்துடன் கூடிய பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க வேண்டும் எனவும்
பணி, கல்வி நிமித்தமாக நள்ளிரவில் நேரங்களில் பேருந்து, ரயில் நிலையம் வரும் பெண்களுக்கு தங்குவதற்கு பாதுகாப்புடன் கூடிய விடுதிகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என  பெண் வழக்கறிஞர்கள் கனிமொழி மதி, காந்திமதி, ரமாமணி, வாசுகி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கூட்டாக  பொது நல வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன், நீதிபதி முகமது ஷஃபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ப்ளீடர் எட்வின் பிராபகர் ஆஜராகி, பெண்கள் பாதுகாப்புக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பணம் செலவு செய்து பல திட்டங்களை செயல்படுத்தும் அரசை பாராட்டுகிறோம் ஆனால் இது குறித்து அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டதா? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு ப்ளீடர், உரிய வகையில் விளம்பரப்படுத்தப்படும் என தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கனிமொழி மதி, திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து ஆய்வு செய்ய விரும்புவதாக கூறினார். இதற்கு அனுமதியளித்த நீதிபதிகள் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

You may also like...