லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடித்து, நாளை திரைக்கு வரவுள்ள “தி லெஜண்ட்” படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Mhc order

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடித்து, நாளை திரைக்கு வரவுள்ள “தி லெஜண்ட்” படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அதன் உரிமையாளர் சரவணன் கதாநாயகனாக நடித்து, “தி லெஜண்ட்” தயாரித்துள்ளார். ஊர்வசி ராவ்டேலா, கீத்திகா, பிரபு, விஜயகுமார், யோகி பாபு, விவேக், கோவை சரளா, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், இயக்குனர்கள் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி உள்ள “தி லெஜண்ட்” திரைப்படம் உலகெங்கிலும் நாளை திரைக்கு வரவுள்ளது.

இந்த படத்தை அரசு மற்றும் தனியார் இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மிகுந்த பொருட் செலவில் படத்தை உருவாக்கி உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்று வாதிட்டார்.

இதையடுத்து, தி லெஜண்ட் திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட 1,262 இணையதளங்களுக்கும், இணைய தள சேவை வழங்கும் 29 நிறுவனங்களுக்கும் படத்தை வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...