வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பாக சென்னையில் இருந்து வந்திருந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.பி. சீனிவாஸ் ஆகியோர் சுமார் 2 மணிநேரம் காரசாரமான விவாதங்களை முன் வைத்து வாதாடினர். கரூர்: வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்த திமுகவினர் 15 நபர்களின் ஜாமின் மீதான விசாரணை தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு.

கரூர்: வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்த திமுகவினர் 15 நபர்களின் ஜாமின் மீதான விசாரணை தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு.

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, திமுகவை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து அவர்களின் கார் கண்ணாடி உடைத்தும் அவர்களை தாக்கிய வழக்கில் கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் இரண்டு பேர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதை தொடர்ந்து கரூர் கீழமை நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து, வருமானவரித்துறை அதிகாரிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தனர்.

மதுரை உயர்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கை விசாரித்தது, கரூர் கிழமை நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்தது சம்பந்தப்பட்ட 15 பேரும் 3 நாட்களுக்குள் கரூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை கரூரில் நீதிமன்றம் விசாரணை செய்து தீர்ப்பு வழங்கலாம் என உத்தரவிட்டிருந்தது.

இதை தொடர்ந்து கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலை 11 மணிக்கு ஆஜராகினர். தொடர்ந்து மாலை 3 மணிக்கு தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது
திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் மணிராஜ், நெடுஞ்செழியன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுந்தரவேல் ஆகியோர் வாதாடினர்.

இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பாக சென்னையில் இருந்து வந்திருந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.பி. சீனிவாஸ் ஆகியோர் சுமார் 2 மணிநேரம் காரசாரமான விவாதங்களை முன் வைத்து வாதாடினர்.

இதை தொடர்ந்து இரு தரப்பு வாதங்களை கேட்டு அறிந்த நீதிபதி ராஜலிங்கம், நாளை 01.08.23 தேதி தீர்ப்பு வழங்குவதாக உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து நீதிமன்றத்தில் சரண் அடைந்த 15 நபர்களும் நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

You may also like...