நீதிபதி டீக்காராமன், சட்ட விதிகளின்படி, தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தற்காலிகக் குழுவை நியமிக்க மத்திய குழுவுக்கு அதிகாரம் இருந்தாலும், தற்போதைய நிர்வாகக் குழுவை கலைத்த பிறகே நியமிக்க முடியும் எனக் கூறி, தற்காலிக குழு நியமன உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

  • தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழுவை நியமித்து தேசிய தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் எனும் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் 27 வது மாநில மாநாடு கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி மதுரையில் நடந்தது. இந்த கூட்டத்தில், ஜெகநாதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • தொழிற்சங்க சட்டப்படி, தலைவர் ஜெகநாதன், சங்கத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், கோபிநாத் ஆகியோரை பொதுச்செயலாளர்களாகவும், ஜெயபால், ஆறுமுகம் உள்பட நான்கு பேரை செயலாளர்களாகவும் நியமித்தார்.
  • இந்நிலையில், தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தலைவராக உள்ள ஜெகநாதன் தலைமையில் 32 உறுப்பினர்களை கொண்ட தற்காலிக குழுவை நியமித்து தேசிய தலைவர் சஞ்சீவரெட்டி, கடந்த செப்டம்பர் 6ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
  • இந்த உத்தரவை எதிர்த்து, பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், செயலாளர்கள் உள்பட ஆறு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
  • அந்த மனுவில், தலைவரான ஜெகநாதன், தவறான நிர்வாகத்தில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், எந்த விளக்கமும் கேட்காமல் தற்காலிக குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • நிர்வாகிகளிடம் எந்த விளக்கமும் கேட்காமல், குற்றப் பின்னணி கொண்டவர்களை தற்காலிக குழு நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சங்கத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் மாநில தலைவர் செயல்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், சட்ட விதிகளின்படி, தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தற்காலிகக் குழுவை நியமிக்க மத்திய குழுவுக்கு அதிகாரம் இருந்தாலும், தற்போதைய நிர்வாகக் குழுவை கலைத்த பிறகே நியமிக்க முடியும் எனக் கூறி, தற்காலிக குழு நியமன உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
  • மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி ஐ.என்.டி.யு.சி மத்திய குழுவுக்கும், தற்காலிக குழு தலைவர் ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...