Add pp muniyaparaj /senior adv ravachery bail cancelled cvkj

நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, அனைவரையும் சரி கட்டி விடுவதாக கூறி ரூசோ மோசடி செய்துள்ளதாகவும், அவரை ஜாமீனில் விடுவித்தது தவறு என்றும் வாதிட்டார்.

அவர் ஜாமினில் இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்றும், பாதிக்கப்பட்ட மேலும் பலர் புகாரளிப்பதை தடுக்க வாய்ப்புள்ளதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார்.

ரூசோ தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால் ஜாமீனை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார்.

இதனையடுத்து, ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்த நீதிபதி, மூன்று நாட்களில் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டுமென உத்தரவிட்டார்.
சரணடையவில்லை என்றால் ரூசோவை கைது செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

You may also like...