False complaint case quashed by madras high court

[12/23, 18:17] Sekarreporter 1: நடிகைகளை வைத்து தொழிலதிபரை இரண்டு பைனான்சியர்கள்
ஏமாற்றி பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் நடிகைகள்,முக்கிய பிரமுகர்கள் ஆகியோருடன் தி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ராஜா என்ற தொழிலதிபர் பிறந்தநாள் கொண்டாடினார்.அப்போது தொழிலதிபர் ராஜாவுடன் நடிகைகளை சேர்த்து வைத்து வீடியோ எடுத்து, 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக
கரூரைச் சேர்ந்த பைனான்சியர்கள் ரமேஷ் மற்றும் கார்த்திக் மீது
பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் மோசடி மற்றும் பணம் பறித்தல் தொடர்பாக ஒரு வழக்கும், பெண்களை வைத்து தவறான செயலில் ஈடுபட்டது தொடர்பாக ஒரு வழக்கும் பாண்டிபஜார் போலீசார் பதிவு செய்துள்ளனர்..
இந்த நிலையில் பைனான்ஸ் ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் தாங்கள் அனைவருமே நண்பர்கள் என்றும் நடிகைகளுடன் வீடியோ எடுத்ததாக பொய்யான தகவல் பரப்பப்பட்டதாகவும், அப்படி ஒரு வீடியோக்களே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது .எனவே தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புகார் அளித்த தொழிலதிபர் ராஜா தரப்பிலும் தங்களுக்குள் எந்த பிரச்சினை இல்லை என்றும்,தவறான தகவலால் புகார் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது ..அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இரண்டு பைனான்சியர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
[12/23, 18:18] Sekarreporter 1: Sir
Case was registered against them on a complaint given by Raja the allegations of the complaint were given based on exaggerated false feeds made to Raja on joint discussion truth was explained and Raja had conceded to quash the case on compromise

You may also like...