Inbadura Former i Mla: *ராதாபுரம் தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கை வழக்கு!* ராதாபுரம் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் அபய் எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

[2/1, 13:53] Inbadura Former i Mla: *ராதாபுரம் தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கை வழக்கு!*

ராதாபுரம் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை
தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் அபய் எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கின் விசாரணையின் போது இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி “கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் தேர்தல் அதிகாரியால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 வாக்குகளுடன் சேர்த்து கடைசி மூன்று சுற்று வாக்குகளையும் திரும்ப எண்ணும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதி மன்ற உத்தரவின்படி மீண்டும் மூன்று சுற்று வாக்குகளை எண்ணியதில் இன்பதுரையே வெற்றி பெற்றார்.

ஆனால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகள் நடுநிலைப்பள்ளி ஆசிரியரால் அட்டஸ்டட் செய்யப்பட்டவை.அவர்கள் கெசட்டட் அதிகாரிகள் அல்ல! மேலும் அந்த 203 வாக்குகளையும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மூவரால் மட்டுமே அட்டஸ்டேசன் செய்யப்பட்டுள்ளது.எனவே அவர்கள் அட்டஸ்டட் செய்த 203 வாக்குகள் செல்லாது என்பதால்தான் கடந்த தேர்தலில் இன்பதுரை வெற்றி பெற்றதாக தேர்தல் கமிஷன் அப்போது அறிவித்தது.எனவே அந்த 203 ஓட்டுகள் செல்லும் வாக்குகளா? இல்லை செல்லாதவையா? என்பதை உச்சநீதிமன்றம்தான் முடிவுசெய்யவேண்டும்.என்று வாதிட்டார்.

கடந்த ஆகஸ்ட் 25 அன்று நடந்த விசாரணையின் போது அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கு விசாரணையை தள்ளி வைக்குமாறு கேட்டபோது
அப்பாவு தரப்பு வழக்கறிஞரை குறுக்கிட்ட நீதிபதிகள் மேலும் கால அவகாசம் வழங்க இயலாது என்றதுடன் தற்போது ராதாபுரம் தொகுதியில் அடுத்த தேர்தல் நடந்து முடிந்து விட்டதால் வழக்கினை சட்டரீதியாக தொடர்ந்து விசாரிக்க வேண்டுமா என்ற கேள்விக்கும் அப்பாவு தரப்பு பதிலளிக்குமாறு கேட்டும் வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.

இன்றைய விசாரணையின் போது அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஜெய்தீப் குப்தா மற்றும் வில்சன் ஆகியோர் மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவில் அப்பாவு வென்றதாக கூறினர் இதற்கு பதிலளித்த இன்பதுரை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கடைசி மூன்று சுற்று மறு வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இன்பதுரை வென்றார். செல்லாத தபால் ஒட்டுக்களை தனது கணக்கில் சேர்த்து எண்ணிதான் அப்பாவு வென்றாக அவரது வழக்கறிஞர்கள் கூறுகின்றனர் என்றார்.

தொடர்ந்து வாதாடிய அப்பாவு வழக்கறிஞர் வில்சன் அடுத்த சட்டமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் இந்த வழக்கு காலாவதி ஆகாது எனவும் தேர்தல் வழக்குகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது என்றபோது குறுக்கிட்ட நீதிபதிகள் வில்சனை நோக்கி நீங்கள் எம்பியாக உள்ளீர்கள், நீதிபதிகள் நியமன விஷயத்திலும் இந்த 6மாத கால அவகாசத்தை நீங்கள் வலியுறுத்தியிருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்

வழக்கு விசாரணையின் போது இந்த வழக்கில் தொடரும் சட்டபிரச்சனை(living issue) இல்லாததால் இவ்வழக்கு காலாவதியாகி விட்டதாகவே நாங்கள் கருதுகிறோம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு அப்பாவு வழக்கறிஞர் அப்பாவு வென்றதாக பதிவு செய்து வழக்கை நீதிமன்றம் முடித்து வைக்கலாம் என கருத்து தெரிவித்தபோது குறுக்கிட்ட இன்பதுரை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி செல்லாத தபால் ஓட்டுக்களை எவ்வாறு எப்படி அப்பாவு கணக்கில் சேர்த்து வென்றதாக கூறமுடியும்? என வாதிட்டார்

வில்சன் தொடர்ந்து வாதிடும்போது அப்பாவு வென்றதாக அறிவித்தால் இன்பதுரை பென்ஷன் வாங்குவது தடைபடும் என வாதிட்டார். இதற்கு பதிலளித்த முகுல் ரோஹத்கி பென்சனை நிறுத்த இந்த வழக்கு ஒன்றும் தேர்தல் முறைகேடு தொடர்பான (corrupt practice) வழக்கு அல்ல! தபால் வாக்குகளை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அட்டஸ்டேஷன் சட்டப்படி செய்யமுடியுமா என்பது தொடர்பான வழக்கு எனவே இது குறித்து விரிவாக நாங்கள் வாதாட தயாராக இருக்கிறோம் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கு காலவதியானது என நீதிமன்றம் கருதுகிறது. இரு தரப்பினரும் வழக்கை விரிவாக வாதிடவேண்டும் என வலியுறுத்துகின்றனர். எனவே இவ்வழக்கிற்கு ஏற்கனவே அப்பீல் அனுமதி வழங்கப்பட்டுவிட்டதால் இவ்வழக்கை உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை வரிசைகிரமப்படி பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
[2/1, 14:18] sekarreporter1: .

You may also like...