mhc 3 new judges swearing sep 23 /acj d krishnakumar

சென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதல் நீதிபதிகளாக 3 மாவட்ட கோர்ட்டு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருக்கும் ஆர்.பூர்ணிமா, சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளராக இருக்கும் எம்.ஜோதிராமன், சென்னை மாவட்ட சிட்டி சிவில் கோர்ட்டில் நீதிபதியாக இருக்கும் ஏ.டி.மரியா கிளிடா ஆகியோரை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிபதி ஆர்.பூர்ணிமா, கடந்த 2011-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் சென்னை ஐகோர்ட்டு விஜிலென்ஸ் பதிவாளராக பணியாற்றி தற்போது, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக உள்ளார்.

நீதிபதி எம்.ஜோதிராமன், திருத்தணியைச் சேர்ந்தவர். இவரும் 2011-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றி, ஐகோர்ட்டு மதுரை கிளையில் பதிவாளராக பணியாற்றினார். தற்போது சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

அதேபோல, நீதிபதி ஏ.டி.மரியா கிளிடா, 1995-ம் ஆண்டு சிவில் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பதவி உயர்வு பெற்று பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றினார். தற்போது சென்னை மாவட்ட சிவில் கோர்ட்டில் பணியாற்றி வருகிறார்.
இவர்கள் அனைவரும் நீதிபதிகளாக விரைவில் பதவி ஏற்க உள்ளார்.

You may also like...