கலப்படம் செய்து சவ்வரிசி விற்கப்படுகிறதா? ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கலப்படம் செய்து சவ்வரிசி விற்கப்படுகிறதா? ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி நடராஜன் என்பவர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சவ்வரிசி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளான மரவள்ளிக் கிழங்கு சேலம், ஈரோடு. தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வரும்நிலையில், எடையை கூட்டுவதற்காக பலவிதமான வேதிப்பொருட்களை கலந்து கலப்பட ஜவ்வரிசியை பலர் விற்பனை செய்வதால், மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் செய்பவர்களும், இயற்கையாக சவ்வரிசி உற்பத்தி செய்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

கலப்படத்தை தடுக்கும் வகையில் ஈரப்பதத்துடன் கூடிய மூலப்பொருளை விற்பனை செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் 2015ஆம் ஆண்டு அறிவுறித்தி உள்ள நிலையில், அதை அனுமதித்ததை எதிர்த்து உணவு பாதுகாப்பு துறைக்கு மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சவ்வரிசி கலப்படத்தை தடுக்க வேண்டுமெனவும், உணவுப் பாதுகாப்பு துறையின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஜவ்வரசி மாதிரிகளை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி ஒன்பது வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மூன்று வெவ்வேறு கடைகளில் விற்பனை செய்யப்பட்ட ஜவ்வரிசி பாக்கெட்டுகளை நீதிமன்றத்திற்கு வரவழைத்த நீதிபதி, அதை உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் வழங்கி, அவற்றை கிண்டியில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வு செய்து கலப்படம் உள்ளதா என்பது குறித்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

You may also like...