காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சோம ஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் உள்ளது என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சோம ஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் உள்ளது என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை என்பது சிவன், பார்வதி, முருகன் ஆகியோர் சேர்ந்து இருக்கும் சிலை வடிவம் ஆகும்.
    இது 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த சிலையில் சில சேதங்கள் ஏற்பட்டு இருந்தது. அதனால் இதற்கு பதிலாக வேறு ஒரு தங்க சிலை செய்தனர். ஸ்தபதி முத்தையா என்பவர் மூலம் இந்த சிலை வடிவமைக்கப்பட்டது.

    இதற்காக 100 கிலோ தங்கம் வசூலித்தார்கள். ஆனால் இந்த புதிய சிலையில் ஒரு துளி தங்கம் கூட இல்லை என்று அண்ணாமலை என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த 2019 ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்து சமய அறநிலையத் துறை அப்போதைய ஆணையர் வீர சண்முகமணி, திருப்பணிப் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா , ஸ்தபதி முத்தையா ,ஸ்தனிகர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் ஆணையர் கவிதா , முத்தையா ஸ்தபதி உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த மனு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார்.

    இதையடுத்து வழக்கை ஜூலை 12ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

You may also like...