சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா குட்கா வழக்கு

குட்கா முறைகேடு தொடர்பான முன்னாள் அமைச்சர்கள் உள்ளிடோர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அனுமதி கிடைக்கவில்லை என கூறி மூன்று ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிப்பதாக சிபிஐக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக சிபிஐ அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தமிழகத்தில் குட்கா பொருள்கள் விற்கபட்ட புகாரில் டெல்லி சிபிஐ காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றது.

இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேரை கைது செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிரான சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் இந்த முறைகேடு புகாரில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா முன்னாள் டிஜிபி , சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் , உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகரிகள் எதிராக 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் பிழையை சரி செய்யது விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் ஆவணங்களுடன் தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் எதிராக வழக்கில் விசாரணைக்கு நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணைக்கான ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கபட்டது.

அப்போது நீதிபதி கடந்த மூன்று ஆண்டுகளாக இதே பதிலை மட்டுமே தெரிவிப்பதாக கண்டனம் தெரிவித்த நீதிபதி வழக்கின் விசாரணை மே 2 தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...