6 மாதத்திற்கு பிறகு வாங்க ரஜினி மகளுக்கும் தனுஷ் விவாகரத்து மனு சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுபா தேவி

[16/04, 08:30] sekarreporter1: பரஸ்பரம் விவாகரத்து கோரிய நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7 தேதி நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து வந்தார்.

அவர்களுடைய காதலுக்கு இரண்டு குடும்பங்களில் இருந்தும் பச்சைக்கொடி காட்ட, கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 தேதி தனுஷ் – ஐஸ்வர்யா திருமணம் சென்னையில் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

சுமார் 20 ஆண்டுகள் திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் தாங்கள் பிரிந்து உள்ளதாக பதிவிட்டனர்.

தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சினை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஈடுபட்டதாகவும் ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை ரத்து செய்து என அறிவிக்க வேண்டும் கோரியுள்ளனர்.

இந்த மனு சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுபா தேவி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்ற நீதிபதி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7 தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தார்.
[16/04, 08:30] sekarreporter1: . 6 மாதம் நீதிபதி சட்டப்படி அவகாசம் வழங்கி உள்ளார். அதன்பிறகு இருவரும். இதே மனநிலையில் இருந்தால்பரஸ்பர விவாகரத்து வழங்கி உத்தரவிடப்படும் என கூறப்படுகிறது

You may also like...