சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் ஆதினத்தின் சார்பாக வழக்கறிஞர் திரு. வள்ளியப்பன் இவ்ழக்கில் ஆஜராகி அறநிலையத்துறையின் பணிநியமன விதிகளில் விதி.3, 7 மற்றும் 9 ஆகிய விதிகளானது ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்பிற்கு விரோதமாக இருப்பதால், இந்த விதிகள் ஆகம முறைப்படி செய்யப்படும்

தமிழகத்தில், அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களில், அர்ச்சகர்கள் நியமன நடவடிக்கையை மற்றும் அறநிலையத்துறை பணிநியமன விதிகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இம்மனுக்கள், தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன் இன்று இறுதி விசாரணைக்கு வந்தன.

சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் ஆதினத்தின் சார்பாக வழக்கறிஞர் திரு. வள்ளியப்பன் இவ்ழக்கில் ஆஜராகி அறநிலையத்துறையின் பணிநியமன விதிகளில் விதி.3, 7 மற்றும் 9 ஆகிய விதிகளானது ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்பிற்கு விரோதமாக இருப்பதால், இந்த விதிகள் ஆகம முறைப்படி செய்யப்படும் கோயில் அர்ச்சகர்களுக்கு பொருந்தாது எனவும், இதனை இரத்து செய்ய கோரியும் வாதிட்டார். மேலும் அரசு நடத்தும் அர்ச்சகர் அரசு பள்ளியின் சான்றிதழ் ஆனது, ஆகம முறைப்படி பூஜை நடக்கும் கோயிலுக்கு பூஜை செய்ய தகுதி கொடுக்காது எனவும் வாதிட்டார்.

மேலும் எந்தெந்த கோயிலில் எந்த ஆகமம் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதனை அறிய அமைக்கப்படும் குழு முடிவினை பொறுத்து ஆகம கோயில்களை நிர்ணயிக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

அர்ச்சகர்கள் பணி நியமனங்கள் சேஷம்மால் மற்றும் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் படி / பின்பற்றி செய்யவேண்டும். தவறும் பச்சத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக அர்ச்சகர்களை நியமனம் செய்யபட்டு இருக்குமேயானால்,
பாதிக்கப்பட்ட நபர் எவருக்கும் எவர் வேண்டுமானாலும் வழக்கு தொடுக்க நீதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

இந்த வழக்கின் தீர்ப்பானது உத்தரவுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

You may also like...