சென்னை மாநகர பேருந்தில் தீடீரென ஏற்பட்ட ஓட்டையில் பெண் தவறி விழுந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது

சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் வரை இயக்கப்பட்ட பேருந்து அரும்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இருக்கையின் கீழ் இருந்த பலகை திடீரென உடைந்து விழுந்தது. அப்போது, அந்த இருக்கையில் அமர்ந்திருந்த பெண் சறுக்கி அந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தார்.

விபத்தில் காயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று பின்னர் வீடு திரும்பினார்.

நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து செய்திதாள்களில் வெளியான செய்தியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் காண்பித்து வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் அவசர முறையீடு செய்தார். போக்குவரத்து துறையின் அலட்சியத்தின் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக கூறினார்.

பின்னர் நீதிபதிகள், இதுகுறித்து பார்ப்பதாக (We Will See That) தெரிவித்துள்ளனர்.

You may also like...