தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு. தினமலர் நாளிதழ் வேலூர், திருச்சி பதிப்புகளின் பதிப்பாளர் கோபால்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு dinamalar velore trichy RR Gopalji pil case. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் அளித்த  அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்துவது குறித்த கோரிக்கையை பரிசீலிக்க சிபிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் அளித்த  அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்துவது குறித்த கோரிக்கையை பரிசீலிக்க சிபிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்த நிலையில், 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும், அவரது மரணமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதை அடுத்து,  ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைத்து கடந்த 2017ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.

ஐந்து ஆண்டுகள் விசாரணைக்கு பின், ஆறுமுகசாமி ஆணையம், 2022 ஆகஸ்ட் 23ம் தேதி அறிக்கை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரி தினமலர் நாளிதழ் வேலூர், திருச்சி பதிப்புகளின் பதிப்பாளர் கோபால்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது, வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் மரணம் குறித்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில், முழுமையான, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு எந்த ஒப்புதலும் வழங்கவில்லை என தெரிவித்தார்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனுதாரரின் மனுவை தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

You may also like...