தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் விவரங்களை தெரிவிக்கும்படி, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் விவரங்களை தெரிவிக்கும்படி, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் பசுக்களை பராமரிக்க 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யக் கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் பசுக்கள் பால் கொடுப்பதை நிறுத்திய பின், அவை நகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும், பூஜாரிகளுக்கும் அறநிலைய வழங்குவதாகவும், அந்த பசுக்கள் அடிமாட்டுக்கு விற்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதை மறுத்து அறநிலையத் துறை தரப்பு, மறுதானம் செய்யப்படும் பசுக்களை முறையாக பாதுகாப்பது தொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பசுக்களின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தரப்பில், தானமாக பெறப்பட்ட பசுக்கள் மற்றும் தானமாக கொடுக்கப்பட்ட பசுக்களின் விவரங்கள் பதிவு செய்து பராமரிக்கப்படுவதாகவும், தற்போது கோவிலுக்குள் 77 பால் கொடுக்கும் பசுக்களும், கோவிலில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் நிலம் ஒதுக்கி, 74 பால் கொடுப்பதை நிறுத்திய பசுக்கள் பராமரிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.

இந்த பசுக்கள் அடிமாட்டுக்கு விற்கப்படுவதாக கூறுவது தவறு எனவும், கால்நடை மருத்துவர்கள் இந்த பசுக்களை அடிக்கடி ஆய்வு செய்து வருவதாகவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர், கோவில் பூஜாரிகளுக்கு, பசுக்களை பராமரிக்கும் அளவுக்கு வருமானம் இல்லை என்றார்.

இதையடுத்து, பூஜாரிகளுக்கு பசுக்களை மறுதானம் வழங்குவதை நிறுத்தி விட்டு, அவற்றை கோசாலைகளுக்கு அனுப்பலாம் என தெரிவித்த நீதிபதிகள், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் விவரங்களையும், மறுதானம் செய்யப்பட்ட பசுக்களின் விவரங்களையும் தெரிவிக்கும்படி, கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...