தொடக்க கல்வி பெறுவது மட்டுமே அடிப்படை உரிமை எனவும், உயர் கல்வி அடிப்படை உரிமை அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடக்க கல்வி பெறுவது மட்டுமே அடிப்படை உரிமை எனவும், உயர் கல்வி அடிப்படை உரிமை அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 15 அரசு சட்டக் கல்லூரிகளும், 9 தனியார் சட்டக் கல்லூரிகளும், 14 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் சட்டப்படிப்பை வழங்கி வரும் நிலையில், 11 தனியார் சட்டக் கல்லூரிகள் துவங்க அரசுக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிசங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், தனியார் சட்டக்கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்க தடை விதிக்கவும், சட்டக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் துவங்க உத்தரவிட வேண்டும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கல்வி பெறுவது அடிப்படை உரிமை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது

ஆறு வயது முதல் 14 வயது வரை தொடக்க கல்வி பெறுவது மட்டுமே அடிப்படை உரிமை எனவும், உயர் கல்வி அடிப்படை உரிமை அல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணை ஜனவரி 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...