நீதிபதி என். சதீஷ்குமார், பெண் உறுப்பினர்களுக்கு மட்டுமே கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என கருத்து தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார். இந்த வழக்கில் 20 ஆண்டுகளாக போடி வெற்றி கிடைத்தது என்று வக்கீல் முரளி கூறினார்
கருணை நீதிபதி என். சதீஷ்குமார், பெண் உறுப்பினர்களுக்கு மட்டுமே கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என கருத்து தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார். இந்த வழக்கில் 20 ஆண்டுகளாக போடி வெற்றி கிடைத்தது என்று வக்கீல் முரளி கூறினார் பெண்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும் என்ற அரசாணை அரசியலமைப்புக்கு எதிரானது என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
வேலூரை சேர்ந்த அருணகிரி சென்னை ஐகோர்ட்டில்தாக்கல் செய்துள்ள அவமதிப்பு வழக்கில், வேலூர் மாவட்ட ஆரம்ப பள்ளியில் மதிய உணவு அமைப்பாளராக பணிபுரிந்து வந்த தனது தந்தை ராமலிங்கம் உயிரிழந்த நிலையில், கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்க வேண்டும் என மனு அளித்தார். அந்த மனு 2015 ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, மீண்டும் வக்கீல் பி.முரளி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட் கருணை அடிப்படையில் அருணகிரிக்கு வேலை வழங்க வேண்டும் என 2021ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்பிறகும் வேலை வழங்கவில்லை இதனால் கோர்ட் அவமதிப்பு வழக்கை வக்கீல் பின்.முரளி ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஸ்குமார் முன் விசாரணைக்கு வந்த்து. அப்போது அரசு வக்கீல் கோர்ட்டில் ஆஜராகி,நீதிமன்ற உத்தரவு அமுல்படுத்திவிட டோம் என்றார்.
இதையடுத்து அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், பெண் உறுப்பினர்களுக்கு மட்டுமே கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என கருத்து தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார். இந்த வழக்கில் 20 ஆண்டுகளாக போடி வெற்றி கிடைத்தது என்று வக்கீல் முரளி கூறினார்