நீதிபதி கே.குமரேஷ் பாபு, குண்டர் சட்டத்தில் அடைக்க தடை விதிக்கக்கோரி மூன்றாவது நபர் எப்படி மனு தாக்கல் செய்ய முடியும் எனவும் ஒருவேளை அவ்வாறு உத்தரவிட்டால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என கூறினார்.

யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி
செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்ததாக பதிவு செய்த வழக்கில், கோவை சைபர் கிரைம் போலீசார், சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு தடை விதிக்கக்கோரியும் சவுக்கு மீடியா நிறுவனத்தில் பணியாற்றும் விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, குண்டர் சட்டத்தில் அடைக்க தடை விதிக்கக்கோரி மூன்றாவது நபர் எப்படி மனு தாக்கல் செய்ய முடியும் எனவும் ஒருவேளை அவ்வாறு உத்தரவிட்டால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என கூறினார்.

மேலும், யூகங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...