மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த செலுத்திய இழப்பீட்டுத் தொகை அரசுக்கு திருப்பி செலுத்தப்பட்டு விட்டதால், இழப்பீட்டு தொகையில் இருந்து வருமான வரி பாக்கி செலுத்த தடை கோரிய வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி, முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த செலுத்திய இழப்பீட்டுத் தொகை அரசுக்கு திருப்பி செலுத்தப்பட்டு விட்டதால், இழப்பீட்டு தொகையில் இருந்து வருமான வரி பாக்கி செலுத்த தடை கோரிய வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி, முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, அதை அரசுடமையாக்கி கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கான இழப்பீட்டுத் தொகையாக 69 கோடி ரூபாயை வைப்பு தொகையாக சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியது.

இந்த தொகையில் இருந்து, ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி 36 கோடியே 87 லட்ச ரூபாயை எடுக்க வருமான வரித்துறைக்கு தடை விதிக்க கோரி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ஏற்கனவே ஜெயலலிதாவிற்காக 50.80 கோடி ரூபாய் செலவில் அரசு நினைவிடம் கட்டி வருவதாகவும், கொரோனா காலகட்டத்தில் நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசு மக்கள் வரி பணத்தை ஜெயலலிதாவின் வரி பாக்கிக்காக செலவிடுவது தவறு என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வேதா நிலையம் கையகப்படுத்தி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டதால், வைப்பீடாக செலுத்தப்பட்ட தொகை வட்டியுடன் சேர்த்து 70 கோடியே 40 லட்சம் ரூபாய் அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்டு விட்டதாக அரசுத்தரப்பில் அரசு பிளீடர் முத்துகுமார் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட தொகையை வருமான வரி பாக்கியை வசூலிக்க தடை கோரிய வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி, முடித்து வைத்தனர்.

You may also like...