முதல்வர் பேச்சு

கடந்த இரண்டு மூன்று தலைமுறையாக தான் நாம் படிச்சு முன்னேறி வாரோம். மரியாதையான வேலைக்கு வந்திருக்கிறோம். அதற்கு என்ன காரணம் என்றால், நாம் போராடி பெற்ற இட ஒதுக்கீடும், சமூக நீதியும் தான். இன்னமும் நமக்கான சமமான, பிரதிநிதி துவமான இடம் கிடைக்கவில்லை. அதற்கு யார் காரணம் பாஜக. இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து உண்டாக்குகிறார்கள், ஒவ்வொரு முறையும் இட ஒதுக்கீடு எங்களது உரிமை என்று போராடி வேண்டியிருக்கு. ஏனென்றால் இட ஒதுக்கீட்டிற்கும், சமூகநீதிக்கும் எதிரான கட்சி பாஜக. பாஜக மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால், இந்தியாவிலேயே இட ஒதுக்கீடு முறை இருக்காது. சமூக நீதிக்கு சவக்குழி தோண்டிவிடுவார்கள்.நம்முடைய மக்களை நூரு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துட்டு போயிவிடுவார்கள்.அதற்கு தான் நாம் பாஜகவை எதிர்க்கிறோம்.இடஒதுக்கீடு கிடைக்க ஆண்டாண்டு காலமாக போராடிகிறோம்.திமுக ஆட்சி என்பது சாமான மக்களுக்கான ஆட்சி தான்.தலைவர் அண்ணா, தலைவைர் கலைஞர் வழியில் திராவிட மாடல் என்ற பெயரில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினான நான் சாமானிய மக்களுக்கான ஆட்சியாக நடத்தி வருகிறேன்.

You may also like...