07/05, 06:21] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1787624725751251269?t=RRfP-h9CD0XiLhr6wPuhww&s=08[07/05, 06:21] sekarreporter1: அதிகாலை துயில்பவர்களுக்குகிழக்கு வெளுப்பதே இல்லை

[07/05, 06:21] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1787624725751251269?t=RRfP-h9CD0XiLhr6wPuhww&s=08
[07/05, 06:21] sekarreporter1: அதிகாலை துயில்பவர்களுக்கு
கிழக்கு வெளுப்பதே இல்லை

மேற்கிலிருந்தே தினமும்
உதயத்தை காண்கிறேன்!

இரவுகளின் கதைகள் கேட்க
காதுகள் தவம் இருக்கின்றன

வெளிச்சத்தை வெட்கம் தின்று விடுவதால்
நடுநிசிகளே மனதை புதுப்பிக்கிறது

பேச்சு சப்தங்கள் அற்ற இரவில்
மூச்சின் நாதத்தை இதயம் ரசிக்கிறது

ஏதுமற்ற பறவைகளின் உலகம்
வாழ்வின் ரகசியம் சொல்கிறது

இறக்கைகள் மட்டும் இருந்தால்
வாழ்வதற்கு வானம் போதும்

செதில்களுடன் பிறந்திருந்தால்
வெறும் நீரில் இருப்பதே நிம்மதி

சிந்திக்க தெரிந்தவனின் பேராசை
இந்த பூமியை தின்றுவிடும்

ராஜவல்லிபுரம் சேது

You may also like...