130 ஆண்டுகளை சென்னை உயர் நீதிமன்ற கட்டடம் நிறைவு செய்வதை ஒட்டி மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுப் பணித்துறையினர் கௌரவிக்கப்பட்டனர்.
130 ஆண்டுகளை சென்னை உயர் நீதிமன்ற கட்டடம் நிறைவு செய்வதை ஒட்டி மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுப் பணித்துறையினர் கௌரவிக்கப்பட்டனர்.
(((MBA))
சென்னை உயர் நீதிமன்ற கட்டிடத்தின் 130ஆம் ஆண்டு நிறைவு நாளையொட்டி பழமையான மெட்ராஸ் பார் அசோசியேசன் சார்பில் விழா நடத்தப்பட்டது.
சங்கத்தின் தலைவர் வி.ஆர்.கமலநாதன் தலைமையில் நடைபெற்ற நிலழ்ச்சியில், தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி உள்ளிட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது மெட்ராஸ் பார் அசோசியேசனின் முன்னாள் தலைவர்கள் ஜி. மாசிலாமணி, விஜய் நாராயண் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
((PWD))
இதேபோல பொதுப்பணித் துறையினரை அழைத்து நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். 130 ஆண்டுகள் ஆன கட்டிடத்தை பராமரித்து வரும் பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு சால்வை அணிவித்தும், கேக் வெட்டியும் நீதிபதிகள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.