தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்ட புகார் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றிய நிலையில் கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தவறு ? என அதிமுக சார்பில் வாதிடப்பட்டது
தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்ட புகார் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றிய நிலையில் கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தவறு ? என அதிமுக சார்பில் வாதிடப்பட்டது.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பல்வேறு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகாவாச்சாரி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர்,
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரய விற்பனை காவல்துறைக்கு தெரிந்தே நடந்துள்ளதாகவும், தங்களது பணியை செய்யாத போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
கர்நாடகா, பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு கள்ளச்சாராயம்
வருவதாகவும் எனவே இது தொடர்பாக சிபிஐ- யால் மட்டுமே விசாரிக்க முடியும் எனவும்
சிபிசிஐடி விசாரணை நடத்தினால் தவறு செய்தவர்கள் தப்பிவிடுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்கப்படுவதாக வெறும் குற்றச்சாட்டு மட்டுமே சொல்லப்பட்ட அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது ஆனால் கள்ளக்குறிச்சியில் தவறு நடந்துததற்கு ஆதாரமாக 73 பேரின் மரணங்கள் உள்ள நிலையில் இந்த வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தவறு எனவும் கேள்வி எழுப்பினார்.
வாதங்கள் நிறைவடையாததை அடுத்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் பத்தாம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.