ஸ்ரீரங்கம் கோயில் யானைகளை பராமரிப்பது தொடர்பாக காவிரி நதி அருகே கோயிலுக்கு சொந்தமான வனம் போன்ற சூழ்நிலை கொண்ட நிலத்தில் பராமரிக்கப்படும் என்றும், விழா காலங்களில் மட்டும் அவற்றை கோயிலுக்கு அழைத்து வரலாம் என்றும் யோசனை கொடுக்கபட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் யானைகளின் உடல்நலன் குறித்து கால்நடை மருத்துவர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு தொடர்பாகவும், கோயில் யானைகள் பராமரிப்பு தொடர்பாகவும் தாக்கல் செய்யபட்ட வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி...