அமிர்பிரசாத் ரெட்டி மனைவி மனு தள்ளுபடி state pp ஜின்னா வாதத்தை ஏற்று judge jayachandren order

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை தற்சமயம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தை அகற்றிய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், JCB இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்தாகவும் கூறி
மாநில பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவராக உள்ள அமர் பிரசாத் ரெட்டியை அக்டோபர் 21ம் தேதி போலீசார் கானத்தூர் காவல் நிலையத்தினர் கைது செய்தனர். சென்னையில் பதிவாகி இருந்த மேலும் இரண்டு வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தனது கணவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாககக் கூறி, அதற்கு தடை விதிக்கக் கோரி அவரது மனைவி நிரோஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

JCB இயந்திரம் உடைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடந்த இடத்தில் தனது கணவர் இல்லை என்றும், தமிழக அரசு மற்றும் ஆளும் கட்சியான திமுக-வின் சமூகவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதால், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

போலி பாஸ்போர்ட் வழங்கிய விவாகரத்தில் உளவுத்துறை முன்னாள் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு தொடர்பு இருப்பதாக புகார் கூறியதால் , அவரது நண்பரான தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் சொல்லி பொய் வழக்கு பதிவு செய்து தனது கணவரை குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, தனது கணவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு விடுவார் என்கிற அச்சத்தில், முன்கூட்டியே வழக்கு தொடர்ந்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும், தற்போதைய நிலையில் அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்னதாகவே தொடரப்பட்ட வழக்கு எனக் கூறி, நிரோஷாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...