அரசு வக்கீல் ஆரத்தி பாஸ்கரன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, சதீஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை, செப்.15-

சென்னை வடபழனி காமாட்சி அம்மன் காலனி முதலாவது தெருவில் வசித்து வந்தவர் சதீஷ்(வயது 32). இவரது மனைவி கனகவள்ளி. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்பு குடும்பம் நடத்த பணம் கொடுக்காமல் கனகவள்ளியை, சதீஷ் துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த கனகவள்ளி 12.12.2015 அன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக சதீஷ் மீது வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஆரத்தி பாஸ்கரன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, சதீஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

===========

You may also like...