நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை/ அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களாக பணியாற்றுபவர்களுக்கு, அரசு செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  1. அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களாக பணியாற்றுபவர்களுக்கு, அரசு செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2017 ம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, செவிலியர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு அரசு நிதியில் இருந்து ஊதியம் வழங்கப்படுவதாகவும், மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு தற்போது 18 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த செவிலியர்கள் விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த தமிழக அரசின் குழு அளித்த அறிக்கையில், மத்திய அரசின் நிதியில் இருந்து நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்களின் பணி, பொறுப்பு உள்ளிட்டவை, அரசு செவிலியர்களின் பொறுப்புக்கும் வித்தியாசம் உள்ளதாக கூறப்பட்டுள்ளதால், அந்த அறிக்கையை ஏற்று, அரசு செவிலியர்களுக்கு இணையாக ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான சாத்தியமில்லை எனவும் அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேசமயம், கடந்த 2018 ம் ஆண்டு முதல் இதுவரை, 4 ஆயிரத்து 12 ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஓய்வு வயது அதிகரித்துள்ளதால் கடந்த இரு ஆண்டுகளாக காலிப் பணியிடங்கள் உருவாகவில்லை எனவும், பணி ஓய்வு, பதவி உயர்வு காரணமாக அடுத்து வரும் ஆண்டுகளில் 1,283 காலிப் பணியிடங்கள் ஏற்பட உள்ளதாகவும் அப்பணியிடங்களில் ஒப்பந்த செவிலியர்களும் நியமிக்கப்படுவர் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

You may also like...