தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு RKNagar election dmk அரசுக்கு கேள்வி அதிமுக அப்பீல் வழக்கை தொடர்ந்து நடத்துவீர்களா? திமுக வழக்கில் கேள்வி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது பண பட்டுவாடா செய்தது குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம், அக்டோபர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஆர்.கே.நகர் தொகுதிக்கு 2017ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் டிடிவி.தினகரனும், திமுக தரப்பில் மருதுகணேசும் போட்டியிட்டனர்.

அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக 89 கோடி ரூபாய் குறித்த கணக்குகள் அடங்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்த மனுவை, சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரும் வகையில் திருத்தம் செய்ய திமுக வேட்பாளர் மருதுகணேசுக்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்த மனுவை உச்ச நீதிமன்றம், வழக்கின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேல் முறையீட்டு வழக்கை அரசு தொடர்ந்து நடத்த விரும்புகிறதா என மருதுகணேஷ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதையடுத்து, வழக்கு தொடர்பாக தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கும்படி அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

You may also like...