நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு வழக்கை பொறுத்தவரை வாதங்களை தொடங்காமல் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆஜராவதற்காக அவகாசம் கோரியதற்காக, உயர் கல்வித் துறை செயலாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகளில் அரசு தரப்பு வாதங்களை தொடங்காவிட்டால், அரசின் விளக்கத்தை கேட்காமலேயே தீர்ப்பளிக்கப்படும் என எச்சரித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரிய தமிழக அரசுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கல்லூரி உதவி பேராசிரியர்களின் பணிமூப்பு தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு முன் இறுதி விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் 45 நிமிடங்களுக்கு மேலாக வழக்கின் வாதங்களை முன்வைத்த நிலையில், அரசு தரப்பில் வாதங்களை தொடங்குவதற்கு பதிலாக, சிறப்பு வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால், வழக்கை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் விசாரணையின்போது மட்டும் அரசு சிறப்பு வழக்கறிஞர், கூடுதல் தலைமை வழக்கறிஞர், தலைமை வழக்கறிஞர் என பலரும் ஆஜராகும் நிலையில், இறுதி விசாரணை நடைபெறும் வழக்குகளில் ஆஜராக வேண்டாமா என கேள்வி எழுப்பினர்.

எந்த ஒரு வழக்காக இருந்தாலும் அரசு தரப்பும், மனுதாரர் தரப்பும் இணைந்து செயல்படும்பட்சத்தில்தான் வழக்கில் விரைவான தீர்வை எட்டமுடியும் என தெரிவித்த நீதிபதிகள், எதிர்வரும் காலங்களில் இறுதி விசாரணையின்போது அரசு தரப்பில் உரிய வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்றால், மனுதாரர் தரப்பு வாதங்களை மட்டும் கேட்டுவிட்டு, அரசின் கருத்தை ஏன் கேட்கவில்லை என விளக்கத்தை குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

இந்த வழக்கை பொறுத்தவரை வாதங்களை தொடங்காமல் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆஜராவதற்காக அவகாசம் கோரியதற்காக, உயர் கல்வித் துறை செயலாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...