நீதிபதி வேல் முருகன், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேரில் ஆஜரான இயக்குனர் பாலாஜி, நீதிமன்ற உத்தரவை மீறி படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டதை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை மீறி ‘டி 3’ திரைப்படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்ட பட இயக்குனருக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு மாத சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் பிரஜன் நடிப்பில் ‘டி 3’ என்ற பெயரில் படம் தயாரிக்க சாமுவேல் காட்சனிடம் 4 கோடி ரூபாயைப் பெற்ற தயாரிப்பாளர் மனோஜ், படத்தில் உரிமையில் 60 சதவீதத்தை சாமுவேலுக்கு வழங்குவதாக ஒப்பந்தமும் செய்தார்.

ஒப்பந்தத்தை மீறி படத்தை வெளியிட்டதாக கூறி சாமுவேல் காட்சன் தொடர்ந்த வழக்கில், ‘டி 3’ படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடை விதித்த உயர் நீதிமன்றம், படத்தின் மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இந்த உத்தரவை மீறி, படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டதாக கூறி, பட இயக்குனர் பாலாஜி, தயாரிப்பாளர் மனோஜ் ஆகியோருக்கு எதிராக சாமுவேல் காட்சன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல் முருகன், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேரில் ஆஜரான இயக்குனர் பாலாஜி, நீதிமன்ற உத்தரவை மீறி படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டதை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜராகாத தயாரிப்பாளர் மனோஜுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 24ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

You may also like...