https://x.com/sekarreporter1/status/1728048537303183557?t=fBkoKgqwfAEJl0IpbyPL9Q&s=08 மன்சூர் அலிகானின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார்.

நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மன்சூர் அலிகானின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை திரிஷாவை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக
நடிகர் மன்சூர் அலிகான் மீது, தேசிய மகளிர் ஆணைய பரிந்துரைப்படி, சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே அவ்வாறு பேசவில்லை என கூறினார்.

மேலும், இது தொடர்பாக நடிகை திரிஷா சார்பில் எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

காவல்துறை சார்பில் மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, மன்சூர் அலிகானின் பேச்சு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.

இதனையடுத்து, மன்சூர் அலிகானின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார்.

You may also like...